'காமசூத்ரா' நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 3D திரைப்படம் காமசூத்ரா. ரூபேஷ் பால் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சாய்ராகான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் மூலம் அவர் பாலிவுட்டிலும் ஒருசில வாய்ப்புகள் பெற்றார். இருப்பினும் அவரால் பெரிய நடிகையாக முடியவில்லை.

இந்த நிலையில் இன்று நடிகை சாய்ராகான் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகை சாய்ராகான் மரணம் குறித்து இயக்குனர் ரூபேஷ் பால் கூறியபோது, சாய்ராவின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காமசூத்ரா படத்தில் அவர் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது எனக்கு வேதனை இருந்தது.

காமசூத்ரா படத்தில் நடிக்க அவர் முதலில் சம்மதிக்கவில்லை. அவரை இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும் கேரக்டரை உணர்ந்து நடித்தார். இந்த படத்தில் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்றும் நிரூபித்தார் என்று தெரிவித்த இயக்குனர்  ரூபேஷ் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.