close
Choose your channels

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியது ஏன்? கமீலா நாசர் விளக்கம்

Wednesday, April 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக இன்று காலை நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிவித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கமீலா நாசர் விடுவிக்கப்படுவதாகவும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து அறிக்கை ஒன்றை கமீலா நாசர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என் சொந்த பணிகள் காரணம் கருதி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் கற்றுத் தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.