close
Choose your channels

மதிய உணவு, மரக்கன்றுகளுடன் விவசாயிகளை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Monday, January 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நிவாரண உதவிகள் கிடைத்துவந்தாலும் தொலைந்து போன விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல வருடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனமுடைந்து தற்கொலை எண்ணத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பட்டுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் 'கனா' திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செய்தனர். மேலும் படம் பார்க்க அனைத்து விவசாயிகளுக்கும் இடைவேளையின்போது திண்பண்டங்களும், படம் முடிந்தவுடன் மதிய உணவும், மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் சோர்ந்து போயிருந்த விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த விவசாயிகள் சிலர் கருத்து கூறியபோது, 'விவசாயம் என்றுமே தோற்றுவிடாது என்பதை இந்த திரைப்படம் எங்களுக்கு எடுத்துரைத்துள்ளது. நாங்கள் இனி புதுவாழ்வை தொடங்குவோம்' என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.