close
Choose your channels

கந்தசஷ்டி கவசம் பாடல் புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்.

Thursday, June 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தினமும் அதிகாலையில் பல வீடுகளில் ஒலிக்கும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாடல்களை பாடிய சூலமங்கலம் சகோதரிகளை தெரியாவர்கள் யாரும் இருக்க முடியாது. சூலமங்கலம் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி சகோதரிகள் பல தேசிய மற்றும் பக்தி பாடல்களை மனதை உருக்கும் வகையில் பாடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவராகிய ஜெயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 85. ஏற்கனவே சூலமங்கலம் ராஜலட்சுமி கடந்த 1992ஆம் ஆண்டு காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூலமங்கலம் சகோதரிகள் தனித்தனியாக பல திரைப்படங்களிலும் பாடியுள்ளனர். குறிப்பாக ஜெயலட்சுமி அவர்கள் 'பிள்ளையார்', 'கந்தர் அலங்காரம்', 'பக்த ராமதாஸ்', 'நாக நந்தினி', 'அரசிளங்குமரி', 'ஆதித்தன் கனவு' போன்ற படங்களை பாடியுள்ளார்.
மறைந்த சூலமங்கலம் ஜெயலட்சுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பெசண்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தற்போது அவருக்கு இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.