close
Choose your channels

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: மேலும் ஒருவர் போலீசில் சரண் 

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூப் சேனல் ஒன்று கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட யூட்யூப் சேனல் மீது காவல்துறையினர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து யூடியூப் சேனலில் நிர்வாகிகளை காவல்துறையினர் தேடிவந்தனர் 

இந்த நிலையில் நேற்று இரவு காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட யூடியூப் சேனலின் உரிமையாளராகிய செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். இதனை அடுத்து சர்ச்சைக்குரிய வகையில் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவரை போலீசார் தேடிவந்தனர் 

இந்த நிலையில் சற்றுமுன் சுரேந்திரன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைத்தில் சரணடைந்ததாகவும், சரணடைந்த சுரேந்திரனை தமிழகம் அழைத்துவர புதுச்சேரிக்கு தமிழக காவல்துறை விரைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சுரேந்திரன் தமிழகத்திற்கு அழைத்து வந்த பின் அவரிடம் தீவிர விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கந்தசஷ்டிகவசம் விவகாரத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.