close
Choose your channels

இது நிறைய பேரை மவுனமாக்கும்… விருதுபெற்ற நடிகை கங்கனா நெற்றியடி!

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் “பத்மஸ்ரீ“ விருதைப் பெற்றுள்ளார். சமீபத்தில் “மணிகர்னிகா“, “பங்கா“ போன்ற திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளைப் பெற்ற நடிகை கங்கனா இதுவரை 4 தேசிய விருதுகளையும் பல ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து நடிகை கங்கனா ரனாவத் “பத்ம ஸ்ரீ“ விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்விற்குப் பின் விருது குறித்து பேசிய அவர், நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் எனது பயணத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கினேன். பின்னர் வெற்றியை ருசிக்க கிட்டத்தட்ட 8-10 ஆண்டுகள் ஆனது. இறுதியாக வெற்றியடைந்தபோது நான் அதை ரசிக்கவில்லை.

காரணம் நான் பெரிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்தேன். இதனால் நான் பணம் சம்பாதிப்பதைவிட அதிகமான எதிரிகளை உருவாக்கினேன். இதையெல்லாம் செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள்? சிலருக்குப் பணம் வேண்டும். சிலர் புகழைத் தேடுகிறார்கள் எனக்கு என்ன வேண்டும்? என்று நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார்.

மேலும் இது உங்கள் வேலை இல்லை என்று என்னிடம் கேள்வி கேட்கும் நிறைய பேரை இந்த விருது மவுனமாக்கும் என்றும் நடிகை கங்கனா தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து விருதுபெற்ற நடிகை கங்கனாவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.