close
Choose your channels

வருமான வரி கூட கட்டமுடியவில்லை… கொரோனா தாக்கம் குறித்து பிரபல நடிகை உருக்கம்!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கொரோனா காரணமாக வேலை இல்லை. அதனால் கடந்த ஆண்டு வருமான வரியைக் கூட முழுமையாகச் செலுத்த முடியவில்லை எனத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். இவரது கருத்து பலரது மத்தியில் தனிக் கவனம் பெற்று இருக்கிறது.

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். இதுபோன்ற நிலமை சினிமா பிரபலங்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வருமான வரியை முழுமையாகச் செலுத்த முடியவில்லை. செலுத்தாத தொகைக்கு அரசு வட்டி விதித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து மீண்டு வருவோம் என நடிகை கங்கனா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “அதிகமாக வருமான வரி செலுத்துபவராக நான் இருக்கிறேன். கிட்டத்தட்ட எனது வருமானத்தின் 45% வருமானத்தை வருமான வரியாக செலுத்துகிறேன். ஆனால் கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால் வாழ்வில் முதன் முறையாக எனது வருமான வரியின் பாதித் தொகையை செலுத்த முடியவில்லை.

நான் தாமதமாக வருமான வரித்தொகையை செலுத்தியதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது. ஆனால் நான் இதனை வரவேற்கிறேன். தனி ஒரு நபருக்கு காலம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து அந்த காலத்தை விட கடினமாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள “தலைவி“ திரைப்படம் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.