முதல்வர் மகன் குறித்த விமர்சனம்: பிரபல நடிகையின் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

முதலமைச்சரையும் முதலமைச்சர் மகனையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்த நடிகை கங்கனா ரனாவத், தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து இவர் தனது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக நெப்போடிஸம் குறித்த இவரது கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் கரண்ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்களை அவர் நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் அவரது மகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்தால் அவர் பயமுறுத்தப்படலாம் என்று அவரது தரப்பினர் கூறியதாகவும் இதனையடுத்து அவர் தற்போது மணாலியில் உள்ள தனது வீட்டில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென நேற்று இரவு கங்கனாவின் மணாலி வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும், இது தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாக தான் கருதுவதாகவும் கங்கனா கூறியுள்ளார். இரவு 11.30 மணிக்கு திடீரென தனது வீட்டில் வீட்டில் இரண்டு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், 8 வினாடிகள் இடைவெளியில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து செக்யூரிட்டியை சென்று பார்க்குமாறு கூறியபோது யாரும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் முதல்வர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்தான் என்னை பயமுறுத்துகின்றனர் என்றும், ஆனால் இதற்கெல்லாம் தான் பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார். மேலும் ’நான் ஒருவேளை என்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு இறந்தால் அது தற்கொலை அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

அபிராமி திரையரங்க உரிமையாளருக்கு மத்திய அரசு செய்த கெளரவம்!

இந்தியாவில் சாதனை செய்த பலரது உருவம் பதித்த தபால் தலைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு!

தர்மபுரி அருகே இளைஞர் ஒருவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும்,

தேர்தல் முன்விரோதம் காரணமாக பயங்கர கலவரம்: வீடுகள், படகுகள் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு

தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் அருகே 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் வீடுகள் தீ

சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து இன்று முதல் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

6 வயது சிறுவன் படுகொலை: சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தில் சிறுவனின் சகோதரி கூறிய திடுக்கிடும் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது