close
Choose your channels

'நான் சந்தித்த அற்புதமான மனிதர்: 'சந்திரமுகி 2' கடைசி நாளில் கங்கனா ரனாவத் புகழாரம்..!

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றுடன் கங்கனாவின் கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தளத்தில் ராகவா லாரன்ஸ் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றுடன் நான் ’சந்திரமுகி 2’ படத்தின் எனது கேரக்டருக்கான படப்பிடிப்பை முடித்து விட்டேன். நான் சந்தித்த ஒரு சில அற்புதமான மனிதர்களிடமிருந்து விடைபெறுவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். அந்த வகையில் லாரன்ஸ் மாஸ்டர் என்று அறியப்பட்ட பிரபலமான டான்ஸ் மாஸ்டரான ராகவா லாரன்ஸ் அவர்களை பிரிவதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கி பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருப்பது மட்டுமின்றி நம்ப முடியாத மனித தன்மையுடனும் கனிவான உள்ளத்துடன் தாராள மனதுடன் அற்புதமான மனிதராக உள்ளார். அவருடைய கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது. உங்களுடன் பணி புரிந்தது மிகச்சிறந்த நேரமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாக்கி வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.