இது காட்டுமிராண்டித்தனமானது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து கனிமொழி!

  • IndiaGlitz, [Tuesday,October 20 2020]

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் எல்லைமீறி விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்தது குறித்து திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகள் ஷிவாவுக்கும் இதே போன்று பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்பு தனது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதும்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்!!!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) குறித்த விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையை எற்படுத்தி வந்தது.

வேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாம் புரமோவில் அரக்கர்களும் ராஜ வம்சத்தினர்களும் மோதும் காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது

உதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்!!!

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பாஜகவில்… நடிகர் வடிவேலு????

வைகை புயல் வடிவேலு தேசிய கட்சியான பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது