close
Choose your channels

கன்னட நடிகை தங்கம் கடத்திய வழக்கு.. தந்தை ஏ.டி.ஜி.பிக்கு சிக்கலா?

Wednesday, March 12, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அவரது தந்தை ஏடிஜிபிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த 3ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த போது சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிபட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் சிக்கியது. இதனை அடுத்து, ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில், ரன்யா ராவை காவலில் எடுத்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அவருடைய தகவலின் படி, ஐந்து நட்சத்திர ஓட்டல் அதிபர் தருண் ராஜு கைது செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருப்பதாகவும், துபாயில் தருணுக்கு சில தொழில்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ரன்யா ராவ், தனது ஐபிஎஸ் அதிகாரியான தந்தையின் பெயரை பயன்படுத்தி தருண் மூலம் தங்க கட்டிகளை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தருண் யாருக்காக தங்க கட்டிகள் கடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், ரன்யா ராவின் தந்தை ஏடிஜிபி ராமச்சந்திர ராவ் இதுகுறித்து கூறிய போது, "என் மகளுக்கும் ஜதீன் என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அதன் பின் எங்களுடன் அவர் தொடர்பு வைத்துக் கொண்டதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரன்யா ராவின் தந்தை ராமச்சந்திர ராவுக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய கூடுதல் தலைமைச் செயலர் கவுரவ் குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரு வாரத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ராமச்சந்திர ராவுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்தால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment