close
Choose your channels

சிறையில் இருக்கும் நடிகைக்காக காத்திருக்கும் படக்குழு!

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இதன் காரணமாக இவர்கள் இருவரும் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்புகள் தாமதமாகி வருவதால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

குறிப்பாக ராகினி திவேதி, ‘காந்தகிரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தில் பிரேம் ஹீரோவாகவும் ரகுஹாசன் இயக்குனராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க ராகினியின் 12 நாட்கள் கால்சீட் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் அவர் தற்போது சிறையில் இருப்பதால் அவருடைய காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படக்குழு முழுவதும் அவருடைய விடுதலைக்காக காத்திருக்கின்றது

இதேபோல் சஞ்சனா கல்ராணி நடித்து வரும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு குழுவினரும் அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றனர். ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவருமே ஏற்கனவே இரண்டு முறை ஜாமீன் மனுதாக்கல் செய்தனர் என்பதும் இரண்டு முறையும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.