close
Choose your channels

பிரபல பாடகி தூக்கில் தொங்கி தற்கொலை: எழுதிய கடிதத்தில் திடுக்கிடும் தகவல்!

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட பாடகி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும் தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது என்ற செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட பாடகி சுஷ்மிதா. 26 வயதான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே அவரது கணவரின் உறவினர்கள் அவரிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்த கொடுமைகளை அவர் வெளியே சொல்லாமல் வாழ்ந்த நிலையில் வரதட்சணை கொடுமையின் டார்ச்சர் அதிகமானதால் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் சுஷ்மிதா கடிதம் ஒன்றை எழுதி வைத்து வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு காரணமாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ள சுஷ்மிதா, அவர்களை சட்டப்படி தண்டிக்க வழிவகை செய்யவும் என்று கூறியுள்ளார். மேலும் தனது இறுதிச்சடங்கில் தனது கணவரின் வீட்டினர் யாரும் வரக்கூடாது என்றும் தனது தம்பிதான் தனக்கு இறுதிச்சடங்கை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அம்மாவிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளதோடு தனது தம்பியை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் வரதட்சணை கொடுமை காரணமாக பிரபல பாடகி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் சுஷ்மிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.