நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமல்ஹாசனை திருமணம் செய்திருப்பேன்: சூப்பர் ஸ்டார் நடிகர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமல்ஹாசனை திருமணம் செய்திருப்பேன் என்று கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிவராஜ்குமார், சென்னையில் '45' என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா இணைந்து நடித்த இந்த படம் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய சிவராஜ்குமார் "கமல்ஹாசன் படங்களை முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடும் அளவுக்கு அவருடைய வெறித்தனமான ரசிகன் நான். கமல் ஒருமுறை என் வீட்டிற்கு வந்தபோது என்னை யார் என்று கேட்டார். அப்போது நான் அவரிடம் 'உங்களை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?' என்று கேட்டேன். அவர் என்னை கட்டிப்பிடித்தார். அந்த மகிழ்ச்சியில் நான் மூன்று நாள் குளிக்க கூட இல்லை. என்னை பொருத்தவரை, நடிகர் என்றால் கமல்ஹாசன் தான். மிகவும் அழகானவர். நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால், அவரை தான் திருமணம் செய்திருப்பேன்," என்றார்.
"நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது, கமல்ஹாசன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசியது எனக்கு தைரியமாக இருந்தது," என்றும் சிவராஜ்குமார் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments