close
Choose your channels

கொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்!

Thursday, May 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது மட்டுமின்றி திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு விரைவில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கும் அனுமதி கொடுக்கும் என்றும் திரையரங்குகளையும் நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 30% மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிப்பது, பார்வையாளர்களுக்கு சானிடைசர் வசதி செய்து கொடுப்பது உள்பட ஒரு சில நிபந்தனைகளுடன் துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் மட்டுமே தற்போது திரையிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக துபாயில் தமிழர்கள், மலையாளிகள் அதிகம் வாழும் முக்கிய தியேட்டர் ஒன்றில் துல்கர் சல்மான் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

துபாயை அடுத்து வேறு சில நாடுகளிலும் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால் சினிமா ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.