அமிதாப்-ஜெயாவுடன் ஒப்பிடப்பட்ட அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது மனைவி.

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பகுதியில் இனவெறியன் ஒருவனால் துப்பாக்கி சூட்டில் பலியான இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மரணம் அவரது குடும்பத்தினர்களை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் ஸ்ரீனிவாஸை இழந்து வாடும் அவரது மனைவி சுனையனா தனது சமூக வலைத்தளத்தில் உருக வைக்கும் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு சமூக வலைத்தளம் ஒன்றில் அறிமுகமாகி இருவரும் மனதால் இணைந்ததாகவும், இருவருடைய வீட்டிலும் முறையாக பேசி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் ஒரு கணவரை மட்டும் இழக்கவில்லை என்றும் ஒரு நல்ல நண்பரை, நம்பிக்கைக்கு உரியவரை, ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டதாகவும், அவருடைய மறைவு தனக்கு மட்டுமின்றி அவரை சார்ந்த அனைவருக்கும் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் வீடு கட்ட வேண்டும் என்று இருவரது கனவாக இருந்தது என்றும், அந்த கனவு கிட்டத்தட்ட நிறைவேறும் நேரத்தில் தான் தனது அருமை கணவரை இழந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். இந்த மிகப்பெரிய இழப்பிற்கும் பின் தனக்கு ஆறுதலாக இருந்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள ஸ்ரீனிவாஸின் நண்பர்கள் ஸ்ரீனிவாஸ் - சுனையனா தம்பதிகளை அமிதாப்பச்சன் - ஜெயாபச்சன் தம்பதியுடன் ஒப்பிட்டு அழைப்பார்களாம். ஏனெனில் ஸ்ரீனிவாஸ் 6அடி 2அங்குல உயரமும், சுனையனா 5 அடி உயரமும் இருந்ததால் அவ்வாறு ஒப்பிட்டு அழைத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

More News

ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துள்ளார்.

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர். உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஒருபக்கம் நேற்று முதல் தமிழகத்தில் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்பட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.

குஷி-2, வாலி-2 படங்களின் ஹீரோக்கள் யார். எஸ்.ஜே.சூர்யா

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி படத்தை இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

நெடுவாசலுக்காக ஒரு பாடல். பிரபல இசையமைப்பாளர் திட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞர்களின் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்தில் திரையுலகினர்கள் தந்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டு போராட்டக்கார்களிடமும், மக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தினர்...

அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும்