close
Choose your channels

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி!!!

Friday, October 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி!!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த கபில் தேவ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் கபில் தேவ் கடந்த 1983 ஆம் ஆண்டு இந்தியா முதல் உலகக் கோப்பையைப் வென்ற போது அணியை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் தனது கருத்துகளை கபில் தேவ் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில் திடீரென கபில் தேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப் பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ஏற்கனவே நீரிழிவு தொடர்பான உடல்நலக் கோளாறு இருந்ததாகவும் அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.