close
Choose your channels

மேக்னாராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் மறைந்த கணவர்: கரண் ஆச்சாரியாவின் கலைவண்ணம்!

Tuesday, October 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புகைப்படங்களை புராண சித்திரங்களாக மாற்றும் கரண் ஆச்சாரியா குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். குழந்தைகளின் புகைப்படங்களை அவர்களது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி கிருஷ்ணர் ராமர் போன்று அச்சு அசலாக மாற்றி அவர்களின் பெற்றோர்களை அசர வைத்தவர் தான் இந்த கரண் ஆச்சாரியார். 

தற்போது இவர் நடிகை மேக்னா ராஜ் குறித்து கரண் ஆச்சார்யா ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் மேக்னா ராஜின் ரசிகர் ஒருவர் கரணிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியான நடிகை மேக்னாராஜ், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியின் போது அவர் தனது மறைந்த கணவரின் கட்அவுட்டை அருகில் வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

எனவே அவருடைய ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மேக்னாராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது மறைந்த கணவர் சிரஞ்சீவி சார்ஜா அருகில் இருப்பது போன்று புகைப்படத்தை மாற்றித் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை ஏற்ற கரண் ஆச்சாரியா, கர்ப்பிணியான மேக்னாராஜ் அருகில் அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜா அவரது கையை பிடித்து நிற்பது போல் மாற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை சிரஞ்சீவி சார்ஜாவின் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.