பிரபல இயக்குனர் தான் ஓரினசேர்கையாளர் என்று பகிரங்க ஒப்புதல்

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோஹரின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கடந்த பல வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து அவரை வெறுப்பேற்றுவது உண்டு. இந்நிலையில் கரண்ஜோஹர் தன்னுடைய சுயசரிதை புத்தகமான' 'An Unsuitable Boy' என்ற புத்தகத்தில் இதுகுறித்து முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து பலர் பலவிதமாக பேசி வருவதுண்டு. அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து வெளியே கூறினால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். ஏனெனில் எனது உறவு குறித்து புரிந்து கொள்ள முடியாத சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் நான் வாழ்ந்து வருகிறேன். எனவே நான் அந்த மூன்றெழுத்து வார்த்தையை வெளிப்படயாக கூறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தனது தாயார் ஹிரோ ஜோஹர் அவருக்கு முழு அளவில் ஆதரவாக உள்ளதாக அந்த புத்தகத்தில் கரண்ஜோஹர் தெரிவித்துள்ளார். பூனம் சாக்சேனா உதவியுடன் கரண் ஜோஹர் எழுதியுள்ள இந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளது. இந்த புத்தகம் நிச்சயம் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தல ரசிகர்களின் கட்-அவுட்

இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள்...

முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் - டெபிட் கார்டு பிரச்சனை

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சூர்யா

பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க ஜல்லிக்கட்டுவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண். காப்பாற்றிய கூகுள்

காதலன் கைவிட்டதால் வெறுப்படைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது அவரை கூகுள் காப்பாற்றிய நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது

ஜல்லிக்கட்டு தடை குறித்து கமல்ஹாசன் கருத்து

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக 'ஜல்லிக்கட்டு' நடத்தி வருவது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.