2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் மாற்று கட்சியில் உள்ள பிரபலங்கள் கூட ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் அதிமுக பிரபலமும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு வாழ்த்து கூறினார்

அந்த வகையில் தற்போது ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்‌ பெருமதிப்புக்குரிய மூத்த அண்ணன்‌ திரு.சூப்பர்‌ ஸ்டார்‌ அவர்கள்‌ வரும்‌ ஜனவரி மாதம்‌ கட்சி துவங்கப்போவதாகவும்‌, இதற்கான அறிவிப்பை வரும்‌ டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதி வெளியிடுவதாகவும்‌ இன்று அறிவித்து இருக்கிறார்‌. இது என்னைப்போன்ற அவரது நலம்‌ விரும்பிகள்‌, ரசிகர்கள்‌ மட்டுமின்றி தமிழக மக்கள்‌ அனைவரின்‌ மனதிலும்‌ மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

2017ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதி அண்ணன்‌ திரு. ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ 'நான்‌ அரசியல்‌ கட்சி துவங்கப்போவது உறுதி என அறிவித்தார்‌. அன்று சொன்னதை இன்று செயல்‌ வடிவத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்‌. அவரது முடிவை நான்‌ வரவேற்கிறேன்‌. அண்ணனின்‌ தலைமையில்‌ 2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌ ஏற்படப்போவது உறுதி. அவருக்கு எனது பாராட்டுதல்களையும்‌, வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மேலும்‌ இந்த கொரோனா காலத்தில்‌ மருத்துவர்களின்‌ அறிவுரைகளையும்‌ மீறி தன்‌ உடல்‌ நலத்தையும்‌, உயிரையும்‌ பொருட்படுத்தாமல்‌ தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட கட்சி துவக்கும்‌ முடிவை அண்ணன்‌ சுப்பர்‌ ஸ்டார்‌ அறிவித்தமைக்கு என்‌ மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்‌.

More News

ஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்

பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் 'எனிமி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி

பிரபல இயக்குனர் அட்லி தயாரிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்கு பின் நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த மூன்று ஆண்டுகளாக

சிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாரதவிலாஸ், பைலட் பிரேம்நாத் உள்ளிட்ட படங்களிலும், கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, சினிமா பைத்தியம், தேன்சிந்துதே வானம்

வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை!

ஒருபக்கம் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு சூர்யா உதவி செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் உழவன் பவுண்டேஷன் மூலம் கார்த்தி உழவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

டாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்!!!

நாட்டின் டாப் 10 காவல் நிலையப் பட்டியலில் சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் காவல் நிலையம் 2 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறது.