ரஜினிக்கு கட்சி ஆரம்பித்தவுடன் வாக்குச்சதவீதம் சுனாமி போல் ஆகிவிடும்: கராத்தே தியாகராஜன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவருமான கராத்தே தியாகராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ரஜினி ஒரு வாக்கு கொடுத்தால், அதை மீறமாட்டார். 2017-ல் தனியாகக் கட்சி தொடங்குவேன் என்று கூறினார். அவர் கூறியதுபோல, விரைவில் கட்சியைப் பதிவு செய்வார். தமிழ்நாட்டின் வாக்கு சதவீதமே, சுனாமி போல மாறிவிடும். ரஜினியின் கட்சி பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுக்கும்.
அடுத்த ஆண்டு, ரஜினியின் பிறந்த நாள் இதைவிட பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார். கடந்த செப். 15-ம் தேதி, அண்ணா பிறந்த நாள் விழாவில் வைகோ பேசினார். அப்போது தமிழ்நாட்டில் 99% பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ரஜினி சொன்னதைப் போல செயல்பட வேண்டும் என்று ஆன்மிக அரசியல் குறித்துப் பேசினார். ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் பரிசோதித்துப் பார்க்கிறார்'' என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments