சீதா வேடத்திற்கு ரூ.12 கோடி கேட்ட பிரபல நடிகை… அதிர்ச்சியில் படக்குழு!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

பாகுபலி போன்ற பிரம்மாண்ட சினிமாக்கள் தொடர்ந்து வெற்றிப்பெறுவதை அடுத்து தற்போது இதிகாசக் கதைகளின் மீது பல இயக்குநர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருந்துவரும் தேசாய் தற்போது சீதா பார்வையில் இருந்து ராமாயணக் கதையை இயக்க இருக்கிறாராம்.

இந்தக் கதையில் சீதாவாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரினா கபூரை படக்குழு அணுகியதாகவும் இந்தப் படத்திற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கரினா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாக்களில் அதிகம் தலைக்காட்டாமல் இருக்கிறார். இதனால் சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் இதனால் அதிர்ந்துபோன படக்குழு வேறொரு நடிகையை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பே ராமாயணக் கதையை பல இயக்குநர்கள் திரைப்படமாக்கி இருக்கின்றன. மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ராமாயணக் கதை எடுக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் தற்போது இயக்குநர் தேசாய் சீதாவின் கண்ணோட்டத்தில் இருந்து இராமாயணக் கதையைப் படமாக்க இருக்கிறார்.

More News

தமிழகத்தில் வரும் ஜுலையில் பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் வரும் ஜுலையில் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி படங்களில் பணிபுரிந்த பழம்பெரும் இயக்குனர் காலமானார்: முதல்வர் இரங்கல்

எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படங்களிலும் கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களிலும் பணிபுரிந்த பழம்பெரும் இயக்குனர் சொர்ணம் காலமானார்

பெற்றோரான புதிய அனுபவம்: மகத்தின் நெகிழ்ச்சியான பதிவு!

மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இதனை மகத் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே.

விஜய்யை அடுத்து அஜித் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகிபாபு!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்: சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000