close
Choose your channels

தனுஷ்-மாரிசெல்வராஜ் படத்தின் அட்டகாசமான டைட்டில்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதையும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என்று பல ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டைட்டில் ’கர்ணன்’ தான் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தின் டைட்டில் குறித்து கூறியதாவது: கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.