அதிமுக கூட்டணில் இருந்து விலகியது தமிழ் நடிகரின் கட்சி: தனித்து போட்டி என அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் ஒன்று நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை. இந்த கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் தமிழகம் முழுவதும் 84 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அக்கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் தங்கள் சமுதாயம் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றியை தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 84 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்று கருணாஸ் கூறினார்.
மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்று கூறிய கருணாஸ், கூவத்தூரில் சசிகலா முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதா புகைப்படம் முன் சத்தியம் செய்தார்கள் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments