close
Choose your channels

ஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ

Saturday, October 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நேற்று திடீரென முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜி பரமேஸ்வரா என்பவரின் வீட்டின் ஐடி ரெய்டு நடந்தது. ஒரே நேரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் சோதனைக்கு பின் கணக்கில் வராத ரூ.4.25 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜி பரமேஸ்வரா வீட்டில் இன்றும் சோதனை தொடரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்த நிலையில் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் பி.ஏ, ரமேஷ் என்பவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்னாள் துணை முதல்வர் வீட்டில் சோதனை நடந்தபோது ரமேஷ் வீட்டிலும் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடி அதிகாரிகள் சோதனை செய்த மறுநாளே ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷின் தற்கொலைக்கு காரணம் என்ன? மிரட்டப்பட்டாரா? அல்லது அவரே எடுத்த முடிவா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.