கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....! தடை விதித்த அரசு...!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில், தனிமைப்படுத்தி இருக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள், வீடுகளிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் நகர்ப்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் கட்டாயமாக கொரோனா சிகிச்சை மையங்களில், அனுமதித்து தான் சிகிச்சை பெற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.



இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் ஆரம்ப சுகாதார மையங்களை, கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் விடுதிகள் இருந்தால், அவை கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாகவும் மாற்றப்படும். தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள்.

நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 ஐசியூ படுக்கைகள் அமைத்து தரப்படும். சுமார் 207 சமூக சுகாதார மையங்கள் இங்கு உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு மையத்திலும், 30 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு மையத்திற்கு தலா 5 ஐசியூ படுக்கைகள் அமைத்து தரப்பட்டு, அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்படும். ஒரு நிமிடத்தில் சுமார் 200 - 300 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய, ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஒவ்வொரு சுகாதார மையத்திலும் அரசு சார்பில் அமைத்து தரப்படும் என அவர் கூறியுள்ளார்.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்!

பிக்பாஸ் தமிழ் போலவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி

அது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கங்கையில் பிணங்கள்

எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வந்த பிரபலம் ஒருவர் தனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டார்கள், ஆனால் தனக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் சோட்டாபீம்

கொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிதாக பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

சந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் சந்தானம் தனக்கு கொடுத்த லவ் லெட்டர் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது