நித்தியானந்தாவை கண்டுபிடிக்க நீதிமன்றம் கெடு: அதிர்ச்சியில் போலீசார்! 

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

பெங்களூரு நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து திடீரென வெளியேறி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது

அதுமட்டுமின்றி ஈக்வடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு அவர் வாங்கி இருப்பதாகவும், அந்த தீவுக்கு கைலாஷ் என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்து, அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நாட்டில் குடியேற 10 லட்சம் பேர் வரை ஆன்லைனில் விண்ணப்பிததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் நித்தியானந்தாவை தேடும் பணியில் கர்நாடகப் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அவர் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டதை அடுத்து இன்டர்போல் போலீசாரை தொடர்பு கொண்டு அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என டிசம்பர் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக போலீசாருக்கு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் கர்நாடக போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றம் கொடுத்த கெடு முடிய இன்னும் 6 நாட்களே இருப்பதால் அதற்குள் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடியில் போலீசார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பூந்தமல்லி பள்ளியில் ஏற்பட்ட சர்ச்சை: தளபதி 64 படத்துக்கு சிக்கலா?

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டும் சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்றது.

யார் இந்த பையன்? தமன்னாவை ஆச்சரியமடைய செய்த புதுமுக நடிகர்

சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான 'பெட்ரோமாக்ஸ்' படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம்: வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள 500 பேர் சிக்குகிறார்களா?

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தைகள் ஆபாச திரைப்படங்களை அதிகம் பார்ப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து தமிழகத்தில் ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியல்

'தலைவி', 'குயின்' பட நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற டைட்டிலில் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி?

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.