கார்த்தியின் அடுத்த படத்தில் 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் 'மாநாடு' நடிகையா?


Send us your feedback to audioarticles@vaarta.com


கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ‘மாநாடு’ படத்தில் நடித்த நடிகை என்றும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வா வாத்தியாரே’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ’சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கார்த்தி அடுத்ததாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், கார்த்தியின் 29வது படமாக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க கடலில் நடக்கும் ஒரு பீரியட் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்றும், முதல் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் ஒட்டுமொத்தமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கார்த்தியின் ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நாயகியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷினியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வைகைப்புயல் வடிவேலுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments