கார்த்தியின் அடுத்த படத்தில் எம்ஜிஆர் கனெக்சன்.. டைட்டில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

கார்த்தி அடுத்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அதன் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை நலன் குமாரசாமி இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கார்த்தி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி, எம்ஜிஆர் ரசிகராக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’ரத்தத்தின் ரத்தமே’ அல்லது ’வா வாத்தியாரே’ போன்ற டைட்டில்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் எம் ஜி ஆர் ரசிகராக நடித்துள்ள நிலையில் கார்த்தியும் அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ரஞ்சிதமே' பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சிறுவன்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த க்யூட் வீடியோ..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில்

குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு விசிட்… இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் வைரல் புகைப்படம்!

இந்திய அளவில் பிரபல இயக்குநராக உருவெடுத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

முதுகலை பட்டத்துடன் வெளியே வந்த கைதி.. சிவகார்த்திகேயன் அப்பா குறித்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

 நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா ஜெயில் சூப்ரெண்ட்டாக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது படிப்பு வாசனையே இல்லாமல் சிறைக்கு வந்த கைதி ஒருவர் வெளியேறும் போது

கன்னட சினிமாவிலும் போதைப்பொருள் சர்ச்சை… மனைவி மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் சர்ச்சை தற்போது பூதாகரமாகி இருக்கும் நிலையில் கன்னட சினிமா துறையில் தயாரிப்பாளராக இருந்துவரும் சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீது அடுக்கடுக்கான

போதைப்பொருள் நபருடன் தொடர்பா? விஜய், விக்ரம் பட நடிகை சுரேகா வாணி விளக்கம்!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் தொடர்பான விவகாரம் தற்போது தலைதூக்கியிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.