'காற்று வெளியிடை' சஸ்பென்ஸை உடைத்த பிரிட்டிஷ் சென்சார்

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்துள்ள 'காற்று வெளியிட' திரைப்படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பார்த்த பலரும் இந்த படம் 'ரோஜா' சாயலில் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.
இந்த சந்தேகத்தை உறுதி செய்வதை போல பிரிட்டிஷ் சென்சார் போர்டு (BBFC) இந்த படத்தை சென்சார் செய்து அதன் சர்டிபிகேட்டில் இந்த படத்தின் கதையை ஒன்லைனில் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த படத்தின் கதை 'ஒரு ராணுவ பைலட் போர்க் கைதியாக பிடித்து வைக்கப்படுகிறார். இந்தியாவில் மருத்துவராக இருக்கும் தனது காதலியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.
'ரோஜா' படத்திலும் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் கடத்தப்பட்ட நிலையில் தனது மனைவியை நினைத்து பார்ப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே BBFC சென்சார் அறிவிப்பால் 'ரோஜா' படத்தின் சாயலில் 'காற்று வெளியிடை' என்பது உறுதியாகியுள்ளது.

More News

த்ரிஷாவுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்த அரவிந்தசாமி

நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கிராமப் பகுதிகளில் நடக்கும் ஊழலை எடுத்துக் கூறும் படமாக இருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது

பிரபல அரசியல்வாதிக்கு லைகா நிறுவனம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலில் ஒப்புக்கொண்டிருந்த ரஜினிகாந்த், பின்னர் தமிழக அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரத்து செய்தார்.

10 வருடங்களுக்கு பின் அஜித் பட இயக்குனரின் அடுத்த படம்

அஜித், அசின் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆழ்வார்'. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதால் இந்த படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த படத்தின் இயக்குனர் ஷெல்லாவிற்கு வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இடையில் இரண்டு படங்களை இவர் இயக்குவதாக இருந்து பின்னர் அவை கைவிடப்பட்டது...

ஆதார் அட்டை கட்டாயமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

இந்திய குடிமகன் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று அவ்வப்போது வெளிவரும் அரசின் உத்தரவுகள் உறுதி செய்து வருகிறது.