close
Choose your channels

'கைதி'யை அடுத்து 'கைதி 2': உறுதி செய்த கார்த்தி

Saturday, October 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தீபாவளி விருந்தாக நேற்று வெளியான ’கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமான படமான ’பிகில்’ திரைப்படத்துடன் வெளிவந்த போதிலும் இந்த படத்திற்கும் திரையரங்குகளில் நல்ல கூட்டம் வந்து கொண்டிருப்பது இந்த படத்தின் விமர்சனம் உடனடியாக மக்களைப் போய் சேர்ந்துள்ளது உள்ளது என்பதை காட்டுகிறது இந்த நிலையில் ’கைதி 2’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்று கார்த்தி உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது: 10 ஆண்டுகளாக வாழ்க்கையைத் தொலைத்தவன் டில்லி. அவனுக்கு வாழ்க்கையில் எந்தவொரு விஷயமே இல்லை. எதைப் பிடித்துக் கொண்டு வாழ முடியும். அவனுக்கு ஏதோ ஒரு விஷயம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. அதற்காகப் பட்டை போட்டுக் கொண்டு வாழ்கிறான். எனக்கும் கடவுள் நம்பிக்கையுண்டு. கோயிலுக்கு எல்லாம் போகவில்லை என்றாலும், தினமும் காலையில் நெற்றியில் திருநீர் இல்லாமல் வெளியே செல்வதில்லை.

இந்தப் படத்துக்காக லாரி ஓட்டியதை மறக்கவே முடியாது. அதுவொரு ஆபத்தான அனுபவம். தூங்காமல் லாரி ஓட்டிக் கொண்டே இருக்கும் அனைத்து டிரைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். 'கைதி' படத்தில் எனது பின்புலக் கதை ஒரு நிஜச் செய்தியாகும்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொலைபேசியில் பேசினார். 30 நாட்கள் மட்டும் தேதிகள் கொடுத்தால் 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவதாகத் தெரிவித்தார். கதையும் தயாராக இருக்கிறது

இவ்வாறி கார்த்தி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.