close
Choose your channels

முளைப்பாரியுடன் கார்த்தி மகள்: இணையத்தை கலக்கும் புகைப்படம்

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் கார்த்தியின் மகள் முளைப்பாரி உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருவதையடுத்து ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு உமையாள் என்ற மகளும் கந்தன் என்ற மகனும் உள்ளனர்.

பொதுவாக சிவகுமார் குடும்பம் சென்னையில் செட்டில் ஆனாலும் அவ்வப்போது தங்கள் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாளையம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் பொங்கல் திருவிழா கொண்டாட்டத்திற்காக கார்த்தி தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் அங்கு தனது மகள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கார்த்தியின் மகள் முளைப்பாரி உடன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கார்த்தி தற்போது ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’விருமன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் ’சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.