முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் படம்.. சிம்பு பட டீம்.. கார்த்தியின் அடுத்த பட தகவல்கள்..


Send us your feedback to audioarticles@vaarta.com


கார்த்தி தற்போது "வா வாத்தியாரே" என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், "சர்தார் 2" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அடுத்தடுத்து சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். தற்போது முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் படத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் சிம்பு பட டீம் இணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
"வா வாத்தியாரே" , "சர்தார் 2" ஆகிய இரண்டு படங்களை முடித்தவுடன் ‘கைதி 2’, ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்தில் அவகார்த்தி நடிக்க இருக்கிறார். அது மட்டுமின்றி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரபல இயக்குனர் கௌதம் மேனன், கார்த்தியை சந்தித்து கதை சொல்லி இருப்பதாகவும், அந்த கதை பிடித்ததை அடுத்து, நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார் என்றும் தகவல் உள்ளது. சிம்பு நடித்த "வெந்து தணிந்தது காடு" படத்திற்குப் பிறகு, கௌதம் மேனன் - ஜெயமோகன் கூட்டணி மீண்டும் கார்த்தி படத்திற்காக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி இதற்கு முன் ‘காற்று வெளியிடை’ என்ற முழு ரொமான்ஸ் படத்தில் நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரொமான்ஸ் கதையில் நடிக்கவுள்ளார்.
ஆனால், லோகேஷ் கனகராஜ், தமிழ், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களை முடித்த பிறகு தான் கௌதம் மேனன் படத்தில் கார்த்தி நடிப்பாரா, அல்லது அதற்கு முன்பே நடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com