'சுல்தான்' படம் குறித்த சூடான அப்டேட் தந்த கார்த்தி!

கார்த்தி நடித்து வந்த’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த பல்வேறு வதந்திகள் எழுந்தன. இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் கதையை நாங்கள் கேட்ட நாள் முதல் இன்று வரை எங்களை ஆச்சரியப்படுத்தி கொண்டும், தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்தியும் வந்தது. இதுவரை எங்களது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்று இந்த படம். இந்த படத்தை நல்லபடியாக முடிக்க உதவிய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி என கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ‘சுல்தான்’ படத்தின் எடிட்டிங் பணிகள் 90% முடிந்துவிட்டது என்றும், தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று எனவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


More News

'சூரரை போற்று' படம் குறித்த வதந்தி: சூர்யாவின் நிறுவனம் விளக்கம்

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீஸுக்கு தயாராக இருந்தது.

குருதியிலேயே உறுதி கலந்து உழைப்போம்… புனித ஜார்ஜ் கோட்டையில் புதிய வரலாறு படைப்போம்… முதல்வரின் உற்சாகம் பொங்கும் பேச்சு!!!

அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்தத் தலைவர்களின் பரிந்துரையோடும் தொண்டர்களின் நல்ல ஆசியோடு அக்கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளராக

கேவலமான படம்: 'இரண்டாம் குத்து' குறித்து பாரதிராஜா

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி நடித்த 'இரண்டாம் குத்து' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்

10 பேர் கூட போதும் தோனி, ஜாதவ்வை தூக்குங்க: தமிழ் நடிகர் கிண்டல் 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி கொடுத்த 168 என்ற எளிய இலக்கை நோக்கி விரட்டிய

அனிதா சம்பத்தின் உருக்கமான பேச்சும், முரண்பாடும்! முதல் புரமோ காட்சிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருசில போட்டியாளர்கள் இன்னும் யார் என்று கூட தெரியாத நிலையில் கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் ஹீரோ ஆகிவிட்டார் அனிதா சம்பத். அவரது உருக்கமான பேச்சு ஒருபுறம் நெகிழ்வை