சமீபத்தில் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் கார்த்தி!

  • IndiaGlitz, [Monday,January 24 2022]

சமீபத்தில் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருடன் நடிகர் கார்த்தி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல நடிகர் கார்த்தி, மணிரத்தினம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அதனை அடுத்து கொம்பன் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விருமன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

மேலும் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ என்ற திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஜீவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ திரைப்படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல் படத்திலேயே சிக்சர் அடித்த சதீஷ் செல்வகுமாரும், தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் கார்த்தியும் இணையவுள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

More News

தோத்துப்போன வெறுப்போட, திரும்ப வர்றான் நெருப்போட: பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் அறிவிப்பு!

'தோத்துப்போன வெறுப்போட,  திரும்ப வர்றான் நெருப்போட' என பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

அஸ்வினின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு: இயக்குனர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு சுமாரான வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

போனிகபூரை சந்தித்த பிரபல சூப்பர் ஸ்டார்:  ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைவார்களா?

தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யாவின் முதல் வேலை இதுதான்: வைரல் புகைப்படம்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

42 வருடங்களுக்கு பின் சென்னை தியேட்டருக்கு சென்ற கமல்ஹாசன்: தியேட்டர் உரிமையாளர் டுவிட்!

சென்னையில் உள்ள தங்கள் திரையரங்குக்கு 42 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் வந்துள்ளது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக அந்த திரையரங்கின் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.