கார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Friday,November 15 2019]

கார்த்தி மற்றும் ஜோதிகா முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை மலையாள இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே எதிர்பார்த்தபடி ‘தம்பி’ என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த டைட்டில் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளர் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

More News

மனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது!

சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் மதன், காஞ்சனா ஆகிய இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர்

நீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில்,

எனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான்: 2வது திருமண கனவு காணும் மணிரத்னம் நாயகி

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' மற்றும் 'செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அதிதிராவ் ஹைத்தி, விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும்,

25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது!

திருவையாறு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் குளிப்பதை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்! கேரளாவில் ஒரு அதிசயம்

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது என்பது உலகில் எப்போதாவது நடைபெறும் ஒரு அரிய நிகழ்வு ஆகும். அந்தவகையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்