close
Choose your channels

கார்த்தியின் அடுத்த பட தயாரிப்பாளர், இயக்குனர் குறித்த தகவல்

Thursday, February 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு ’தேவ்’, 'கைதி’ மற்றும் ’தம்பி’ ஆகிய 3 படங்களில் நடித்த நிலையில் இந்த ஆண்டு அவர் சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் அவர் வந்தியத்தேவன் என்ற முக்கியவேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கார்த்தியின் அடுத்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை மார்ச் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தேவ்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.