close
Choose your channels

14 வருடங்கள் ஆனபின்னர் இன்னும் பேசுகிறார்கள்: கார்த்தி பெருமிதம்!

Monday, October 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது வெற்றி பெற்ற படம் ஒன்றினை குறித்து 14 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் மதுரை மக்கள் பேசுகிறார்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் தொடங்கியுள்ளது. இதற்காக மதுரை சென்று உள்ள கார்த்தியை மதுரை மக்கள் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றுள்ளதாகவும், மேலும் 14 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’பருத்தி வீரன்’ படத்தை பற்றி இப்பொழுதும் அவர்கள் பேசுகிறார்கள் என்று மதுரை மக்களின் அன்பும் அரவணைப்பும் இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது என்றும் இதனை பார்க்கும் போது மதுரை மக்களை மிகவும் நன்றி உள்ளவர்களாக உணர்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.