close
Choose your channels

கமல், ரஜினிக்கு நன்றி சொன்ன கார்த்தி.. இதுதான் காரணம்!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே மிகப் பெரிய புகழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இந்த படத்தின் நாயகன் வந்தியத்தேவனின் கேரக்டரில் நடித்த கார்த்திக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வந்தது. இந்நிலையில் தனது நடிப்பை பாராட்டிய கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கமல் சார், சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க நீங்கள் எப்பொழுதும் எங்களுக்கு தூண்டுதலாக இருந்திருக்கின்றீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரஜினிக்கு அவர் நன்றி தெரிவித்து கூறியபோது, ‘ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணியை பாராட்டுவதில் நீங்கள் முதல் நபராக உள்ளீர்கள். உங்களுடைய வாழ்த்து எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.