close
Choose your channels

பிரிந்த சகோதரர்களை இணைத்து வைத்த 'கடைக்குட்டி சிங்கம்': கார்த்திக் பெருமிதம்

Monday, July 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் வெற்றி என்பதற்கு ஆதாரம், அந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் வரும் முதல் திங்கட்கிழமையில் கிடைக்கும் வசூலை பொறுத்துதான் என்று விநியோகிஸ்தர்கள் கூறுவதுண்டு.

அந்த வகையில் இன்றும் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கில் மக்கள் குவிந்ததில் இருந்தே இந்த படத்தின் வெற்று உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது: இந்த படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு அனைவரும் இந்த படத்தை பார்த்து வருவதாக கிடைத்திருக்கும் செய்தியால் மகிழ்ச்சி

குடும்பத்தில் குறை, நிறைகள் இருப்பது சகஜம். ஆனாலும் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும். இதைத்தான் 'கடைக்குட்டி சிங்கம்' உணர்த்தியுள்ளது. இந்த படத்தை பார்த்து, பேசாமல் இருந்த இரண்டு சகோதரர்கள் பேசிக்கொண்டதாக ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் கிடைத்த சந்தோஷத்தை வெளியிட வார்த்தையே இல்லை என்று கார்த்தி கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.