'கைதி 2' 'சர்தார் 2' அப்டேட்.. திருப்பதியில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் கார்த்தி திருப்பதிக்கு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘கைதி 2’ மற்றும் 'சர்தார் 2' படங்கள் குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தற்போது "வா வாத்தியாரே" என்ற படத்தை முடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக அவர் "சர்தார் 2" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை முடித்தவுடன், அவர் ‘கைதி 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் "கூலி" திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் ‘கைதி 2’ படத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதியில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் கார்த்தி, "திருப்பதிக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என் மகன் பிறந்தவுடன் வரவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் வர முடியவில்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது, குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறோம்" என்று கூறினார்.
மேலும், "வா வாத்தியாரே " படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்றும், ‘கைதி 2’ மற்றும் "சர்தார் 2" ஆகிய படங்களும் வரிசையாக உருவாகி, ரிலீசாகும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com