பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு கணவர் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

கடந்த சில நாட்களாக பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளிவந்தன. இந்த பதிவுகள் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தனது சமூக வலைத்தளத்தில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தது. இன்றுதான் அந்த கணக்கை மறுபடியும் மீட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக அந்த டுவிட்டர் கணக்கில் செய்யப்பட்ட பதிவிற்கும் சுசித்ராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் உள்ளவை அனைத்தும் பொய்யானவை. இந்த விஷயத்தை இதற்கு மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டு கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் கணவர் கார்த்திக்கின் இந்த விளக்கத்தை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.

More News

அத்தைக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க தயாரா? தீபாவுக்கு நடிகர் ஜீவா கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. நாளொரு திருப்பமும், பொழுதொரு பிரேக்கிங் நியூஸ்களும் வந்து கொண்டிருக்கின்றது.

பிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்

நயன்தாரா நடித்த 'மாயா' உள்பட பல படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் ஆரி. பழனியில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்....

தனுஷின் 'பவர்பாண்டி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'பவர்பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது....

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

ரஜினி படத்திற்காக இறக்குமதி ஆகியுள்ள ஜெர்மனி-இங்கிலாந்து ஸ்டண்ட் இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...