close
Choose your channels

கார்த்திக் நரேனிடம் நம்பிக்கை மோசடி செய்தது யார்? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

Tuesday, March 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் 16' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது படமான 'நாடக மேடை' என்ற படத்தை விரைவில் இயக்கவுள்ளார். இந்த நிலையில் தவறான நம்பிக்கை குறித்து கார்த்திக் நரேன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து நம்பிக்கை வையுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என்று கூறியுள்ளார்.

திடீரென தத்துவம் பொழியும் வகையில் கார்த்திக் நரேன் டுவீட் இருந்தது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்லுங்கள் என்று அவரது இந்த டுவீட்டின் கீழே கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. கார்த்திக் மனதில் உள்ளதை வெளியே சொன்னாலன்றி இந்த நம்பிக்கை மோசடி குறித்த மர்மத்திற்கு விடை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.