close
Choose your channels

முடிவுக்கு வந்தது கார்த்திக் நரேனின் அடுத்த படம்

Monday, August 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இளம் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் கோலிவுட் திரையுலகினர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் இயக்கிய 'நரகாசுரன்' திரைப்படம் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கி வந்த 'மாபியா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த படத்தில் அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து நடிகர் அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 'மாபியா' படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாகவும், குறிப்பாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த அனுபவம் தனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் நாயகி ப்ரியா பவானிசங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படத்தின் இரவுபகலாக நடந்த படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தந்தனர் என்றும் குறிப்பாக தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனத்திற்கு தனது நன்றிகள் என்றும் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.