'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது அனுபவங்களை கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது:

'மாஃபியா' உருவாக காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண்விஜய்யும் தான். இருவருக்கும் நன்றி. கதை விவாதத்தின்போதே அருண் விஜய், பிரசன்னா தான் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப் படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. ’தடம்’சமயத்தில் தான் அருண்விஜய்யிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார். பிரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் இந்தப்படத்தின் வில்லன் வேடம் மிகச்சிறப்பாக பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை செய்யாத வேடம், இந்தக்கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே என்னை வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள்.

பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணா ’துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்தே தெரியும். இந்த படத்தில் உலகத்தரமான இசையை தந்துள்ளார். 33 நாட்களில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் படக்குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 21 படம் வருகிறது. இது ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்’என்று கூறியுள்ளார்.

இந்த படத்தை அடுத்து கார்த்திக் நரேன், தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. சத்யஜ்யோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

More News

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த

இவர்கள் எல்லாம் இப்போது இல்லையே! 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'ஹேராம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து இன்று காலை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்

"நீ அழகாக இல்லை" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..!

சென்னை அனகாபுத்தூரில் காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலனை பிடித்து திருமணம் செய்து வைத்தனர் போலீசார்.

தன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..! வீடியோ.

இருவரும் வருடம் கடந்து பழகும் நண்பர்கள் போல பழகி வரும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்வுறச் செய்துள்ளது.

இது என்ன இந்தியாவா..!? போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.

ஜனநாயக நாடு மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர