close
Choose your channels

ரஜினியை முதல்முறையாக பார்த்த தருணம்: கார்த்திக் நரேன் 

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் நேற்று வெளியான ’மாஃபியா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை ரஜினிகாந்த் பார்த்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வுகள் குறித்தும், ரஜினியை சந்தித்தபோது ஏற்பட்ட பரபரப்பு குறித்தும் தனது நினைவுகளை கார்த்திக் நரேன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அவர்களை பார்க்க போகிறோம் என்றவுடன் ஒரு பரபரப்பு ஏற்பட்டது என்றும் இருப்பினும் அவரை தான் ஒரு இயக்குனராக தான் பார்க்க சென்றதாகவும் ஆனால் அவரை பார்த்தவுடன் எல்லாமே மறந்து அவருடைய தீவிர ரசிகராக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். அவர் ‘மாஃபியா’ குறித்து பல கமெண்டுக்கள் கூறியதாகவும் அதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், அவரை சந்தித்த அந்த நாள் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் கார்த்திக் நரேன் தெரிவித்தார்.

மேலும் தனுஷ், ஜிவி பிரகாஷ் கூட்டணி என்றாலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நான் பூர்த்தி செய்வேன் என்றும் ‘தனுஷ் 43’ படம் குறித்து தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos