பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த 2 பிரபல இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பேரறிவாளனின் தாயார் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த பதிவை செய்துள்ளனர். குற்றம் செய்யாத ஒருவருக்கு 30 வருட சிறை தண்டனை, அந்த மகனை விடுவிக்க ஒரு தாயின் 30 வருட போராட்டம். இதனை மனதில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு செய்துள்ளார்

அதேபோல் இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியதாவது: அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

லஞ்சத்தில் கொழிக்கும் இந்தியா! உலக அளவில் எந்தனையாவது இடம் தெரியுமா???

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 77 ஆவது இடத்தில் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.

என்னை உன்கூட உள்ள அனுப்பி சாவடிக்கிறாங்கப்பா! பாலாஜியை புலம்ப வைத்த சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாத பாலாஜி அணியில் உள்ள பாலாஜி, சுசி மற்றும் ரம்யா ஆகியயோர்களில் பாலாஜி, சுசி ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

நயன்தாராவுடன் பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியது என்பது தெரிந்ததே.

சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட்!

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை', 'அரண்மணை 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 3' படத்தை அவர் இயக்கி வருகிறார்.

நடிகை சாந்தினியின் ஓவிய புகைப்படம் இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துள்ள படம் 'பொல்லாத உலகில் பயங்கர கேம். விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.