நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்: பிக்பாஸ் சுசித்ராவின் கணவர்

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சுசித்ராவின் கணவர் கார்த்திக்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமின்றி இவர் ஒரு மிகச்சிறந்த ஸ்டாண்ட்-அப் காமடியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகிறது. அதில் ’தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் என்றால் என்னை தான் கூப்பிடுவார்கள் என்றும், அமெரிக்க மாப்பிள்ளைக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாலினி, லைலா, ராணிமுகர்ஜி ஆகியோர்களை நான்தான் தானம் செய்து இருக்கிறேன் என்றும் நயன்தாராவுக்கு இப்போது ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது என்றால் அதற்கு நான் தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்

தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் குமார் மற்றும் நயன்தாராவுக்கு தான் திருமணம் நடப்பதாக கதை செல்லும். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென நயன்தாராவை தனுஷ் திருமணம் செய்து கொள்வார். இந்த படத்தின் கதையை வைத்து கார்த்திக் குமார் பேசிய காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

வெங்கட்பிரபு மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஷிவானி கொடுத்த அன்பு பரிசு!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபுவின் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

கணவர், குழந்தையுடன் இருக்கும் விஜய்யின் 'யூத்' பட நாயகி: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'யூத்'. வின்சென்ட் செல்வா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக சாஹின்கான் என்பவர் நடித்திருந்தார்.

கொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்!

கொரோனா நிதியாக தனது திருமணத்திற்கு வைத்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண் குறித்து முதல்வர் ஸ்டாலின்

3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 21-ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார்.