close
Choose your channels

கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிக்கின்றது: நடிகர் கார்த்திக் கருத்து

Friday, September 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கருணாஸ் பேச்சு குறித்து நடிகரும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் கூறுகையில் கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கருணாஸ் தம்பி அப்படி பேசியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஆனால் ஒன்று நான் சொல்லி கொள்வது என்னவென்றால் தமிழத்தில் வீரர்களுக்கு குறைவில்லை. வீரர்கள் நேருக்கு நேராக நின்று போராடுவார்களே தவிர கோழை போல் கொலை செய்ய மாட்டார்கள். கொலை செய்வது என்னை பொருத்தவரையில் கோழைத்தனம்

இந்தியா முழுவதும் நிராயுதபாணியாக இருப்பவர்களை பிளான் பண்ணி கொலை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. யாராக இருந்தாலும் கொலை செய்வது என்பது கோழைத்தனம். முக்குலத்து மக்கள் எப்போதும் நேரடியாக நின்று போராடுவார்கள். பழிவாங்கும் செயலான கொலையை செய்ய மாட்டார்கள். கருணாஸ் எந்த அர்த்ததில் அவ்வாறு கூறினார் என்பது எனக்கு தெரியாது. மேலும் யாரையும் பிரித்து பார்க்க வேண்டாம். நாம் எல்லோருமே வீரர்கள் தான். நியாயமான விஷயங்களுக்கு நேராக நின்று போராடுவோம்' என்று கார்த்திக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.