'ஜிகர்தண்டா 2' கதைக்களம் 1975 என தேர்வு செய்ததற்கு ரஜினி தான் காரணம்: கார்த்திக் சுப்புராஜ்

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது என்பது இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். மேலும் 1975ஆம் ஆண்டு தான் படத்தின் கதைக்களம் என்றும் டிரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதைக்களம் 1975 ஆம் ஆண்டு நடந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் முதல் கருப்பு ஹீரோ என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால் அதை ரஜினிகாந்த் அவர்களின் தாக்கத்தை வைத்து தான் கதை எழுதினேன்.

கடந்த 1975 ஆம் ஆண்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ அறிமுகமான இந்த ஆண்டை எனது கருப்பு ஹீரோ கேரக்டருக்காக பயன்படுத்திக் கொண்டேன். அந்த இடத்திலிருந்து தான் இந்த படத்தின் முக்கியமான கதை மற்றும் திரைக்கதை தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'அறம்' இயக்குநர் கோபி நயினார் அடுத்த பட அறிவிப்பு.. ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் மாஸ் பதிவு.. இணையத்தில் வைரல்..!

நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவனாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது

வெளியில என்ன பேசுறாங்கன்னு கரெக்டா ஊகித்த தினேஷ்.. மாயா கேங்கிற்கு ஆப்பு?

 மாயா கேங்கில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக அராஜகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கேங்கில் உள்ளவர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும்

மணிரத்னம் ஆயிரம் கேட்பாரு, குடுக்க முடியுமா? கமல்ஹாசனிடம் பார்த்திபன்..!

மணிரத்னம் ஆயிரம் கேட்பார் கொடுக்க முடியுமா? உங்களிடம் இருக்கிறது கொடுக்குறீங்க' என்று நகைச்சுவைடன் கமல்ஹாசன் உடன் பேசியதை நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்

சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அனுஷ்கா? 50 வது படமாக அமையுமா?

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா தனது 50வது படமாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.